Skip to main content

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா, அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.
    பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று.
பேசுவதை தவிர்க்க காரணம்...
    எப்பொழுதும் நம்பிக்கையற்று வெறும் dry யாக அவன் பேச்சு இருக்கும், என்னால் இயன்ற அளவு நம்பிக்கை கொடுப்பேன், என்னாலும் அவ்வளவுதான் செய்ய முடியும். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் கொஞ்சம் கூட அவனுடைய அனத்தல்களை தாக்கு பிடிக்க முடியவில்லை.  அவன் உண்மையைதான் பேசுகிறானா அல்லது கற்பனை செய்து கொள்கிறானா (i know his condition, so i didn't think he lie about things) என தெரியவில்லை.  நேரடியாக சந்தித்து பேசினால் மட்டுமே உண்மை நிலை தெரியும் என எண்ணி, நானே நேரிடையாக சந்திக்க வருவதாக கூறினேன். தான் ஒரு remote placeல் இருப்பதாகவும், இன்னும் பல இத்தியாதிகளையும் சொன்னான்.
    பேச்சில் தெளிவில்லை, சொல்வது எதுவும் நம்புவது போல் இல்லை, நேரில் சந்திக்கவும் தவிர்க்கிறான்.  விஷயம் முழுவதும் தவறாக இருக்கவே நானாக அவனை எந்த வழியிலும் contact செய்ய முயற்சிக்கவில்லை, அவனும் அடுத்து எதுவும் பேசவில்லை. பின்னர் சில வாரங்கள் block செய்து வைத்திருந்தேன். 
    இப்பொழுது வேலைக்கு சென்று நல்ல நிலையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அவனுக்கு வேலை கிடைத்ததை என்னிடம் சொல்லாமல் அவனுடைய fantasy கதைகளை (பொய்) சொல்லி விரக்தியாக, வெறுப்பாக இருப்பதாக தொடர்ச்சியாக அனத்தி என்னை எதற்கு இம்சை செய்ய வேண்டும்?  அவனுடைய பேச்சு மிகவும் வித்தியாசமாக இருந்ததினால் அவனை தவிர்க்க block செய்து வைத்திருந்ததனால் எனக்கு guilty வேறு.
    Anyway, இவ்வளவு குயுக்தி எண்ணம் கொண்ட ஒரு நபரிடம் இருந்து நகர்ந்து வந்தது எனக்கு நன்மையே.  மேலும் பேச்சை தவிர்த்த குற்ற உணர்ச்சியும் இப்பொழுது இல்லை.  உன்னுடைய நிலையை எண்ணி உண்மையாக வருந்தி உதவ முயற்சித்த நபரிடம் சொல்லிருக்கலாம் தான் ஆனால் இப்படியாப்பட்ட எண்ண ஓட்டம் உள்ள ஒருவர் என்னிடம் எதுவும் பகிராமல் இருந்ததும் மகிழ்ச்சிதான்.
    காலம் அனைவரையும் தோலுரித்து காட்டி விடுகிறது.

Comments

Popular posts from this blog

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.

அவள் ஒரு தொடர்கதை...

கனவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்  யாருக்கும் தன் கனவு தெரியாதென மமதையில் சுற்றி கொண்டிருக்கிறாள்  அனைவருக்கும் அவள் கனவை தெரியும்  அவர்கள் யாரும் காட்டிக்கொள்வதில்லை  கனவை தெரியுமென காட்டிக்கொள்ள கூடாதென்பது பெரியவர்களுக்கே உரித்தான ஒன்று போல  அறிவாளியான அவளும் கண்டு கொள்வாள் இவர்களின் நிலைப்பாட்டை  எனக்கு தெரியும்  இவளும் காட்டிக்கொள்ள மாட்டாள்!

ரயில் பயணம் ...

குழந்தைகளுக்கே உரித்தான கன்னமது, கொழுக்மொழுக்கென.  பால் கன்னம் என்பார்கள்.  குழந்தைகளின் கன்னங்கள் கிள்ளப்படுவதற்கான முக்கிய காரணி, அவனுக்கும் இருந்தது. இரண்டு வயதிற்கு மேல் இருந்திருக்காது, அவனுடைய அண்ணனும் அம்மாவும் ஜன்னலே கதி என்று கிடக்க, சீட்டில் இவனுக்கு இடம் தாராளமாக இருந்தது. கையில் கவர் பிரிக்காத ஒரு சாக்லேட் வைத்துக்கொண்டு எங்களுக்கு வித்தை காட்டிக்கொண்டு இருந்தான். என்னையும் சேர்த்து நால்வரின் கவனமும் அவன் மீது இருந்ததை   கண்ட  அவனது அம்மா நாங்கள் பார்த்து கொள்வோம் என்றெண்ணி அதன் பின்னர் அவனை கண்டுகொள்ளவில்லை.  அவனுடைய அம்மாவும், அவரது இன்னொரு மகனும் சேர்ந்து ஜன்னலிடம் கதை பேசிக் கொண்டிருந்தனர்.  பின்னர், இருவர் கூட்டணியில் மூன்றாவதாக அவனும் இணைந்து கொண்டான்.  அது இவ்வளவு நேரம் எங்கே மறைந்திருந்தது எங்கிருந்து வந்தது என யோசிக்க கூட எங்களுக்கு அவன் அவகாசம் கொடுக்கவில்லை.  ஆம், அவன் தூங்கிவிட்டான். திண்டுக்கல் ரயில் நிலையம்!? அங்கே மழை பெய்து கொண்டிருந்தது, பெய்து கொண்டே இருந்தது... வருணனுக்கு அன்று மனநிலையில் சிறிது யோசனைகள் போலும்?...