Skip to main content

Posts

Showing posts with the label சிந்தனை

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.

ரயில் பயணம் ...

குழந்தைகளுக்கே உரித்தான கன்னமது, கொழுக்மொழுக்கென.  பால் கன்னம் என்பார்கள்.  குழந்தைகளின் கன்னங்கள் கிள்ளப்படுவதற்கான முக்கிய காரணி, அவனுக்கும் இருந்தது. இரண்டு வயதிற்கு மேல் இருந்திருக்காது, அவனுடைய அண்ணனும் அம்மாவும் ஜன்னலே கதி என்று கிடக்க, சீட்டில் இவனுக்கு இடம் தாராளமாக இருந்தது. கையில் கவர் பிரிக்காத ஒரு சாக்லேட் வைத்துக்கொண்டு எங்களுக்கு வித்தை காட்டிக்கொண்டு இருந்தான். என்னையும் சேர்த்து நால்வரின் கவனமும் அவன் மீது இருந்ததை   கண்ட  அவனது அம்மா நாங்கள் பார்த்து கொள்வோம் என்றெண்ணி அதன் பின்னர் அவனை கண்டுகொள்ளவில்லை.  அவனுடைய அம்மாவும், அவரது இன்னொரு மகனும் சேர்ந்து ஜன்னலிடம் கதை பேசிக் கொண்டிருந்தனர்.  பின்னர், இருவர் கூட்டணியில் மூன்றாவதாக அவனும் இணைந்து கொண்டான்.  அது இவ்வளவு நேரம் எங்கே மறைந்திருந்தது எங்கிருந்து வந்தது என யோசிக்க கூட எங்களுக்கு அவன் அவகாசம் கொடுக்கவில்லை.  ஆம், அவன் தூங்கிவிட்டான். திண்டுக்கல் ரயில் நிலையம்!? அங்கே மழை பெய்து கொண்டிருந்தது, பெய்து கொண்டே இருந்தது... வருணனுக்கு அன்று மனநிலையில் சிறிது யோசனைகள் போலும்?...

அவள் ஒரு தொடர்கதை...

கனவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்  யாருக்கும் தன் கனவு தெரியாதென மமதையில் சுற்றி கொண்டிருக்கிறாள்  அனைவருக்கும் அவள் கனவை தெரியும்  அவர்கள் யாரும் காட்டிக்கொள்வதில்லை  கனவை தெரியுமென காட்டிக்கொள்ள கூடாதென்பது பெரியவர்களுக்கே உரித்தான ஒன்று போல  அறிவாளியான அவளும் கண்டு கொள்வாள் இவர்களின் நிலைப்பாட்டை  எனக்கு தெரியும்  இவளும் காட்டிக்கொள்ள மாட்டாள்!